என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்பட்டு கொள்ளை"

    • கடந்த 10-ந்தேதி சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வண்டலூர்:

    ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூர் கிராமம், கவின் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு அலுவலகத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி புவனேஸ்வரியுடன் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார். மேல் தளத்தில் அவர்களது ஒரு மகன் குடும்பத்துடன் உள்ளார்.

    இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், பூஜை பொருட்கள், இரண்டு லேப்டாப் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.

    வீட்டின் மேல் தளத்தில் உள்ள சீனிவாசனின் மகன் தங்கி இருந்த அறைக்கு கொள்ளையர்கள் செல்லாததால் அங்கிருந்த 30 பவுன் நகை தப்பியது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கூடுவாஞ்சேரி அருகே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி அருகே உள்ள காரணை புதுச்சேரி கோகுலம் காலனியை சேர்ந்தவர் நந்தகோபால். வணிக வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    இவர் கடந்த 23-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராணிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

    பீரோவில் இருந்த 60 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்று விட்டனர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×