என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்"
- புதிய மின் கட்டண உயர்வு என்ற தகவலால் அதிர்ச்சி.
- மின்கட்டண சலுகை போன்ற சிறப்பு திட்டங்களை வழங்குவதன்மூலம் இந்த பின்னலாடை தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய முடியும்.
நல்லூர்:
புதிய மின்கட்டண உயர்வை தவிர்க்க வேண்டும் என திருப்பூர் தொழில் துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:-
திருப்பூரில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் மூலம் 75சதவீத பின்னலாடை உற்பத்தி பணிகள் நடைபெறுகின்றன. மீதமுள்ள பெரிய நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் வளர்ந்து வருகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, மழை, நூல் விலை உயர்வு, பஞ்சு கிடைக்காமல் தவிப்பு, தொழிலில் உள்ள கடன், வராக்கடன் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சிறு,குறு, நடுத்தர தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.
தற்போது மின்சார கட்டணம் உயரப்போகிறது என்ற தகவல் வெளி வந்துள்ளது. ஏற்கனவே 'பீக் ஹவர்ஸ்' பிரச்சினை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள், தற்போது புதிய மின் கட்டண உயர்வு என்ற தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளன.
தற்போது இந்திய ஜவுளித்தொழில் துறையினருக்கு சர்வதேச அளவில் நல்ல பிரகாசமான வர்த்தக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. போட்டி நாடுகளில் உள்ள பிரச்சினைகள், தரம், விலை போன்ற பிரச்சினைகளாலும், அமெரிக்க நாடு விதித்துள்ள வரி விகிதத்தாலும் இந்தியாவுக்கு பல சாதகமான விஷயங்கள் கிடைத்துள்ளன.
இந்த சமயத்தில் எளிமையான வங்கிக்கடன், மின்கட்டண சலுகை போன்ற சிறப்பு திட்டங்களை வழங்குவதன்மூலம் இந்த பின்னலாடை தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய முடியும்.
ஆனால் புதிய மின்கட்டண உயர்வு அறிவிக்கப்படும் போது தொழில் துறையினர் சோர்வு அடைவது உறுதி. மகாராஷ்டிரா அரசு அங்கு மின்கட்டணத்தில் 10சதவீதத்தை குறைத்து அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
குறைந்தபட்சம் மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தாலாவது திருப்பூர் பின்னலாடைத்தொழில் துறையினர் நிம்மதியாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில், கூஸ் நெக்ஸ்ட் கண்காட்சி, வரும் செப்டம்பர் 2-ந்தேதி தொடங்கி 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது.கடந்த 2020 ல், பிரான்ஸின் மொத்த இறக்குமதி ரூ.ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 600 கோடி.
இதில் இந்தியாவின் பங்களிப்பு 4.16 சதவீத அளவே உள்ளது. அதேபோல், அந்நாட்டின் ஆயத்த ஆடை இறக்குமதியில்இந்தியாவின் பங்களிப்பு 4.13 சதவீதமாக உள்ளது.சீனா, வியட்நாம் போன்ற போட்டி நாடுகளை ஒப்பிடும்போது பிரான்ஸ் சந்தையில் வரிச்சலுகைகளால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பாதகமும் இல்லை.
பிரான்ஸ் நாட்டுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே திருப்பூர் உள்பட நாடுமுழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் பாரீஸ் கண்காட்சியில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என, ஏ.இ.பி.சி., வேண்டுகோள்விடுத்துள்ளது.
கண்காட்சி மூலம், புதிய வர்த்தகர்களுடனான தொடர்பு ஏற்படுத்தி பிரான்ஸ் நாட்டுக்கான ஏற்றுமதியை உயர்த்த முடியும். கண்காட்சியில் அரங்கம் அமைக்க ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 15-ந்தேதிக்குள் பதிவு செய்வோருக்கு 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவரங்களுக்கு, 0421 2232634, 99441 81001, 94430 16219 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஏ.இ.பி.சி., நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.






