search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேடர்பாளையம் அருகே முதியவர் திடீர் பலியானார். நாமக்கல் செய்திகள்"

    ஜேடர்பாளையம் அருகே முதியவர் திடீர் பலியானார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள ராஜவாய்க்கால் பாலம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து கிடந்தவரின் உடல்  அருகே கிடந்த பையை எடுத்து சோதனை செய்தனர். இதில் அவர் ஈரோடு மாவட்டம், மரப்பாளம், முனிசிபால் சத்திரத்தை சேர்ந்த வரதராஜ் (70)  என்பது தெரிய வந்தது. 

    அதனையடுத்து அவரது உடலத்தை மீட்டு  போலீசார் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×