search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyathurai Pandian peravai"

    கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரி புளியரையில் 1-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அய்யாத்துரை பாண்டியன் பேரவை அறிவித்துள்ளது.
    சங்கரன்கோவில்:

    தென் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டாக்டர்.அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் நாளை மறுநாள் (1-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புளியரை சோதனை சாவடி அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

    இதில், வழக்கறிஞர் முன்னாள் எம்.எல்.ஏ. குருநாதன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேச பாண்டியன், பெரியார், வைகை பாசன விவசாய சங்க செயலாளர் அன்வர் பாலசிங்கம், நெல்லை மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு நெல்லை மண்டல செயலாளர் செல்லத்துரை,

    நெல்லை, தென்காசி ஒருங்கிணைந்த விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி, செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன்ம மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்கின்றார்கள் என அய்யாத்துரை பாண்டியன் பேரவை தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் இதில் கட்சி பாகுபாடு இல்லாது இயற்கை வளத்தை காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பொதுமக்களும் அணி திரள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
    ×