என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 331365
நீங்கள் தேடியது "Two Buses Collide"
கேரள மாநிலம் கொல்லம் அருகே நேற்று இரவு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
கொல்லம்:
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு அரசுக்கு சொந்தமான கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மீது சுற்றுலா பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் குறைந்தது 57 பேர் காயமடைந்தனர்.
கொல்லம் ஊரகப் பகுதியில் உள்ள சித்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப்புழா-மடத்தாரா சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லேசான காயம் அடைந்த 15 பேர் கடக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற காயமடைந்தவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் கூறினார்.
காயமடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து: வேன்-லாரி மோதி 7 பக்தர்கள் பலி
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X