என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக புகையிலை எதிர்ப்பு தினம்"

    • ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.

    புவனேஸ்வர்:

    உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்து அரசு மட்டுமின்றி சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமாண்டமான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.

    சிகரெட்டின் தீமையை விளக்கும் வகையில் எலும்புக்கூட்டை வடிவமைத்த அவர், குடும்பத்தில் இருந்து உங்களை விலக்கும் முன்னர் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    புகையிலை பயன்பாடு உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி தயாரிப்பு கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
    சென்னை:

    உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது, இதையொட்டி நாடு முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 33 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

    மேரி அன்னே அறக்கட்டளை மற்றும் தி யூனியன் அமைப்பு நடத்திய ஆய்வில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் 8 ஆயிரம் டன் புகையிலை கழிவுகள் வெளியாவது தெரிய வந்துள்ளது.

    இதில் சிகரெட் கழிவுகள் 4,039 டன், பீடி கழிவுகள் 606 டன் ஆகும். மற்றவை புகையில்லா புகையிலை கழிவுகளாகும்.

    தமிழ்நாட்டில் வசிப்பவர்களில் 20 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துகிறார்கள். 6.3 சதவீதம் பேர் சிகரெட் குடிப்பவர்கள். பீடி புகைப்பவர்கள் 5.4 சதவீதம் பேர் ஆகும்.

    ஆய்வு மையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புகையிலை பயன்பாடு உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி தயாரிப்பு கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. புகையிலை பொருட்களை பேக்கேஜிங் செய்வதில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பது எங்களது பரிந்துரையாகும். கழிவு பொருட்களை அகற்ற உற்பத்தி நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அல்லது கழிவுகளை அகற்ற அரசு பணம் வசூலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×