search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலா"

    சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 82 விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ நிதித் திட்டத்தின்  (பி.எம்.கிசான் திட்டம்)  மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை  தலா ரூ.2 ஆயிரம்  என ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய்  பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில்  விவசாயிகளுக்கான நிதியுதவித் திடடத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளுக்கு 11-வது தவணையாக ரூ.21,000 கோடியை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக  தலா ரூ.2000 செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும்  அதிகமான விவசாயிகளுடைய  வங்கி கணக்கில் தலா ரூ.2000 செலுத்தப்பட்டது. 10-வது தவணை பணம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி புத்தாண்டு தினத்தில்  பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தினார்.

    சேலம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 475 விவசாயிகள் பொதுத்துறை வங்கிகளின் மூலம் உழவர் கடன் அட்டை (கிசான் கார்டு) பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ×