என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை இயக்கம்"

    • காந்தி சிலைக்கு என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டு பள்ளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • சமூக நலனுக்காக மேற் கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் என்எல்சி முன்னணியில் இருக்கும்.

    கடலூர்:

    நெய்வேலி நகரியத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் வெகு ஜன தூய்மை இயக்கம் நடைபெற்றது. முன்னதாக, பிரதான சந்தைப் பகுதி யில் உள்ள காந்தி சிலைக்கு என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டு பள்ளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தூய்மை இயக்க த்தை தொடங்கி வைத்தார். நிறுவன இயக்குநர்கள் சுரேஷ் சந்தி ரசுமன், சமீர் ஸ்வரூப், எம்.வெங்க டாசலம், தலைமை ஒற்றாடல் அதிகாரி எல்.சந்திரசேகர், அங்கீகரிக்கப் பட்ட தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், சிஐஎஸ்எப் பணியாளர்கள், ஒப் பந்தத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பல்வேறு இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், தூய்மையின் முக்கிய த்துவத்தை வலியு றுத்தும் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் என்எல்சி தலைவர் பேசியதாவது: சமூக நலனுக்காக மேற் கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் என்எல்சி முன்னணியில் இருக்கும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. நிகழாண்டு தூய் மைக்கான செயல்பாடு களை திறம்பட ஒழுங்கமை ப்பதில் என்எல்சி இந்தியா முதலிடம் வகிக்கும் என்றார்.

    ராஜபாளையத்தில் தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    ராஜபாளையம்,

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூய்மை நகரம் மற்றும்பேரூராட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பில் நாம் இருக்கும் இடத்தை தூய்மையான பகுதியாக மாற்ற குப்பைகளை மக்கும் குப்பை, மட்காத குப்பை, என பிரித்து வழங்க வேண்டி ராஜபாளையம் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. 

    இதை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கொடியசைத்தும், சாலையை தூய்மைப்படுத்தியும் தொடங்கி வைத்தார்.

    அதேபோல் செட்டி யார்பட்டி பேரூராட்சியில் பாலித்தின் பயன்பாட்டை தவிர்த்து விட்டு மஞ்சள் பையை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக  அங்குள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு  சென்று மஞ்சள் பை வழங்கினார். 

    விழாவில் பேசிய  அவர், இந்தியாவிலேயே முதல் தூய்மையான மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுகிறவர்   முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.அ வர் வழியில் என்றும் நடப்போம். நாம் இருக்கும் இடத்தை தூய்மையான இடமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்போம் என்றார்.

    விழாவில் தி.மு.க. நகர செயலாளர் ராம மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஷியாம் ராஜா, கனகராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், நகராட்சி துணை சேர்மன் கல்பனா குழந்தை வேலு, செட்டி யார்பட்டி சேர்மன் ஜெயமுருகன், துணை சேர்மன் விநாயகமூர்த்தி,  செட்டியார்பட்டி நகர செயலாளர் இளங்கோவன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×