என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்4 Jun 2022 6:18 AM GMT (Updated: 4 Jun 2022 6:18 AM GMT)
ராஜபாளையத்தில் தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூய்மை நகரம் மற்றும்பேரூராட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பில் நாம் இருக்கும் இடத்தை தூய்மையான பகுதியாக மாற்ற குப்பைகளை மக்கும் குப்பை, மட்காத குப்பை, என பிரித்து வழங்க வேண்டி ராஜபாளையம் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கொடியசைத்தும், சாலையை தூய்மைப்படுத்தியும் தொடங்கி வைத்தார்.
அதேபோல் செட்டி யார்பட்டி பேரூராட்சியில் பாலித்தின் பயன்பாட்டை தவிர்த்து விட்டு மஞ்சள் பையை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அங்குள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று மஞ்சள் பை வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், இந்தியாவிலேயே முதல் தூய்மையான மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுகிறவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.அ வர் வழியில் என்றும் நடப்போம். நாம் இருக்கும் இடத்தை தூய்மையான இடமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்போம் என்றார்.
விழாவில் தி.மு.க. நகர செயலாளர் ராம மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஷியாம் ராஜா, கனகராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், நகராட்சி துணை சேர்மன் கல்பனா குழந்தை வேலு, செட்டி யார்பட்டி சேர்மன் ஜெயமுருகன், துணை சேர்மன் விநாயகமூர்த்தி, செட்டியார்பட்டி நகர செயலாளர் இளங்கோவன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X