என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Technology Day"

    • தொழில்நுட்ப நாள் விழா நிகழ்ச்சிகளில் விவசாயிகள் பங்கேற்கலாம்.
    • இந்த தகவலை வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிறுவனநாள் மற்றும் தொழில்நுட்பநாள் வருகிற 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரைநடைபெற உள்ளது. முதல் நாள் விழா வேளாண் அறிவியல் நிலையத்திலும், 2-ம் நாள் உச்சிப்புளி அருகே தாமரை குளத்திலும், 3-ம் நாள் விழா திருவாடானையிலும் நடைபெற உள்ளது.

    இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் தொழில்நுட்ப உரை, கண்காட்சி மற்றும் செயல் விளக்கங்கள் இடம்பெற உள்ளன. முதல் நாளில் நவீன தொழில்நுட்பம் மூலம் நெல் சாகுபடி முறைகள் குறித்தும், 2-வது நாளில் சிறுதானிய ரகங்கள் குறித்தும், 3-ம் நாளில் நவீன தொழில்நுட்ப முறையில் நெல்சாகுபடி குறித்தும் தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

    மேலும் புதிய நெல்ரகங்கள் குறித்தும், உழவு மற்றும் விதை விதைக்க பயன்படுத்தப்படும் கருவிகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, களை மேலாண்மை மற்றும் நெல்லில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள், விதை நேர்த்திக்கு தேவையான இடு பொருட்கள், விதை கடினப்படுத்தும் முறைகள், எந்திரங்களை பயன்படுத்தி விதை விதைக்கும் முறைகள், மற்றும் பயிர் ஊக்கிகள் தெளித்தல் ஆகியவை குறித்த செயல் விளக்கமும், கண்காட்சியும் இடம்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் உள்ள விவசா யிகள் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரடியாக வந்தும் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்களுக்கு சென்றும் தகவல்களை தெரிந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் தொடர்புக்கு விரிவாக்க ஒருங்கி ணைப்பாளர் சிவக்கு மாரை 8825986445 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

    மதுரை சேர்மத்தாய்வாசன் கல்லூரியில் நடந்த தேசிய தொழில்நுட்ப தினவிழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் பேசினார்.
    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் உள்ள நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப தினம் மற்றும் நூதன அடைவு மைய தொடக்க விழா நடந்தது. 

    கல்லூரி தலைவர் மாரீஸ்குமார், செயலாளர் கரிக்கோல்ராஜ், பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த விஞ்ஞானி டாக்டர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முதல்வர் கார்த்திகாராணி வரவேற்றார். 

    சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் கலந்து கொண்டு புதிய மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி நூலக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    நவீன உலகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதிக்க தொடங்கி விட்டனர். ஒரு துறை மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களின் சாதனை அதிகரித்து வருகிறது. 

    பெண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்ய முடியும். அந்த அளவுக்கு பெண்களுக்கு திறமை இருக்கிறது. பெண்களிடம் ஒரு வேலையை கொடுத்தால் முடியாது என்ற பதிலை கேட்க முடியாது. 

    முடியாததை கூட முடிக்கும் திறமை பெண்களிடம் இருக்கிறது. அவர்களிடம் தலைமைத்துவ பண்பு அதிகம் உள்ளது. பெண்கள் எதையும் பார்த்து பயப்படக்கூடாது. முயற்சி இருந்தால் கிராமப்புற பெண்களால் கூட எல்லாத்துறைகளிலும் சாதிக்க முடியும். 

    காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வேளாண்மை மற்றும் விண்வெளி துறையிலும் பெண்கள் அதிகம் சாதிக்க வேண்டும். புதிய, புதிய கண்டுபிடிப்புகளை அவர்கள் உருவாக்க வேண்டும். இது தொழில்நுட்பம் நிறைந்த உலகம் என்பதால்  அனைவரும் தொழில் நுட்பத்தை நன்றாக கற்றுக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு அதனை பயன்படுத்த வேண்டும். 

    கிராமப்புற மாணவி களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கல்லூரியில் பல திறமைகள் கொண்ட மாணவிகள் உருவாக வேண்டும். திறமைகளின் உறைவிடமே நமது பாரதம். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    முன்னதாக பாரா பேட்மிண்டன் போட்டியில் சர்வதேச அளவில் சாதித்த மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவை டாக்டர் கே.சிவன் பாராட்டி முதல் பரிசு வழங்கினார். அந்த மாணவிக்கு பல்வேறு அமைப்பின் சார்பில் கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. 

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர். இயற்பியல்துறை தலைவி கவிதா நன்றி கூறினார்.
    ×