என் மலர்
நீங்கள் தேடியது "Technology Day"
- தொழில்நுட்ப நாள் விழா நிகழ்ச்சிகளில் விவசாயிகள் பங்கேற்கலாம்.
- இந்த தகவலை வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
கீழக்கரை
ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிறுவனநாள் மற்றும் தொழில்நுட்பநாள் வருகிற 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரைநடைபெற உள்ளது. முதல் நாள் விழா வேளாண் அறிவியல் நிலையத்திலும், 2-ம் நாள் உச்சிப்புளி அருகே தாமரை குளத்திலும், 3-ம் நாள் விழா திருவாடானையிலும் நடைபெற உள்ளது.
இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் தொழில்நுட்ப உரை, கண்காட்சி மற்றும் செயல் விளக்கங்கள் இடம்பெற உள்ளன. முதல் நாளில் நவீன தொழில்நுட்பம் மூலம் நெல் சாகுபடி முறைகள் குறித்தும், 2-வது நாளில் சிறுதானிய ரகங்கள் குறித்தும், 3-ம் நாளில் நவீன தொழில்நுட்ப முறையில் நெல்சாகுபடி குறித்தும் தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
மேலும் புதிய நெல்ரகங்கள் குறித்தும், உழவு மற்றும் விதை விதைக்க பயன்படுத்தப்படும் கருவிகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, களை மேலாண்மை மற்றும் நெல்லில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள், விதை நேர்த்திக்கு தேவையான இடு பொருட்கள், விதை கடினப்படுத்தும் முறைகள், எந்திரங்களை பயன்படுத்தி விதை விதைக்கும் முறைகள், மற்றும் பயிர் ஊக்கிகள் தெளித்தல் ஆகியவை குறித்த செயல் விளக்கமும், கண்காட்சியும் இடம்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் உள்ள விவசா யிகள் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரடியாக வந்தும் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்களுக்கு சென்றும் தகவல்களை தெரிந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் தொடர்புக்கு விரிவாக்க ஒருங்கி ணைப்பாளர் சிவக்கு மாரை 8825986445 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்து உள்ளார்.






