search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "30 tons"

    எடப்பாடி அருகே 30 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    எடப்பாடி அருகேவுள்ள ஒட்டப்பட்டி கிராமத்தில் ரமேஷ் என்பவரின் குடோனில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை சப்ளை செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. 

    இதையடுத்து குடோனில் ஆய்வுசெய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விற்பனைக்காக பாக்கெட்டுகளில் பொட்டலங்களாக  தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 30 டன் புகையிலை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவன், கூறுகையில் கடந்த மாதம் இதே குடோனில் புகையிலையை பாக்கெட் செய்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

     உடனடியாக ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்து சென்றோம். தற்போது மீண்டும் அதே தவறை செய்து வந்ததால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் புகையிலையை பறிமுதல் செய்தோம் என்றார்.
    ×