என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயம்"
- தட்டச்சு பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.
- மாயமானவர்களை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் 1-வது வார்டு கோம்பை ரோடு பகுதியை சேர்ந்தவர் அழகுகுமார்(34). இவர் கடந்த 4 வருடங்களாக உ.அம்மாபட்டிைய சேர்ந்த வனராஜ் என்பவருடன் சேர்ந்து தேங்காய் வியாபாரம் பார்த்து வந்தார்.
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அழகுகுமார் சம்பவத்தன்று வீட்டைவிட்டு மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி கம்பம் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அடுத்துள்ள கோகிலாபுரம் சி.எஸ்.ஐ தெருவை சேர்ந்த சத்தியநாதன் மகள் ரிதன்யா(17). பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று தட்டச்சு பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயமாகினர்.
- வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
கரூர்:
கரூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் தேஜாஸ்ரீ (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று வருதாக கூறி விட்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
ஆனால் மாலை வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் தேஜாஸ்ரீயை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேஜாஸ்ரீ தாத்தா திருநாவுக்கரசு கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோட்டநத்தம் பகுதியை சேர்ந்தவர் கொடியரசு (46). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கொடியரசின் மகள் பாரதி கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






