என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொட்டிய"
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.
குறிப்பாக காடையாம்பட்டி, ஏற்காடு, வீரகனூர், மேட்டூர், ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோடை காலத்தில் பெய்த மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் ேதங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏற்காட்டில் 7 மணிக்கு தொடங்கிய மழை 9 மணி வரை கனமழையாக பெய்தது. பின்னர் மீண்டும் 10 மணிக்கு தொடங்கிய மழை விடிய, விடிய சாரல் மழையாக நீடித்தது. இதனால் இரவில் குளிர்ந்த சீேதாஷ்ண நிலவியது. இன்று காலை வெயில் அடித்த படி இருந்தது. மழையை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது . இதனால் பொது மக்கள் தவித்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்ச–மாக காடையாம்–பட்டியில் 63 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏற்காடு 49 , வீரகனூர் 42, மேட்டூர் 26.8, ஓமலூர் 26, தம்மமம்பட்டி 25, கரியகோவில் 17, எடப்பாடி 17.2, சேலம் 12.3, சங்ககிரி 9.2, ஆத்தூர் 4.3, கெங்கவல்லி 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 291.8 மி.மீ. மழை பெய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்