என் மலர்
நீங்கள் தேடியது "tag 150896"
தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ள ‘அநீதி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் அர்ஜூன்தாஸ். இவர் அநீதி என்ற படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த துஷாரா விஜயன் இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபால இயக்கியுள்ளார். இதில் வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அநீதி
இப்படத்தை பள்ளி நண்பர்களுடன் இணைந்து வசந்தபாலன் “அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்” நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர். கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார். விறுவிறுப்பாக நடைப்பெற்று அநீதி படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை அதிகாரப்புர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
அநீதி குறும்பட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ், நீட் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று பேசினார். #Aneedhi #GVPrakash
நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், சமூகப்போராளி திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஜி.வி.பிரகாஷ் பேசும்போது,
அநீதி ரொம்ப முக்கியமான குறும்படம். இந்த படத்தைப் பாதிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் முடிவு பாசிட்டிவாக அமைத்தது சந்தோஷமாக இருந்தது. நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ, அவர்களே அதை வைத்துக்கொள்ளட்டும் தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை. நான் அனிதாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். மரணிக்கும் சமயத்தில் அனிதாவின் மனதில் என்ன ஓடியிருக்கும் என்பதை அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்த போது என்னால் அறிய முடிந்தது. அதனால் அந்த வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. அந்த கலக்கம் இன்னும் என்னை விட்டு போகவில்லை. இந்த படத்தின் கதையோட்டம் எப்படி இருந்தாலும் படத்தின் முடிவு மிக முக்கியமானது’ என்றார்.
அநீதி குறும்படம் இதுவரை 7 விருதுகளை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Aneedhi #GVPrakash
காவல்துறை தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தமிழ் வழி பயின்றவர்களுக்கு பெரும் அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran
சென்னை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தால், 12 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட காவல்துறையின் தொழில்நுட்ப உதவி ஆய்வாளருக்கான தேர்வில், 55 ஆயிரம் பேர் பங்கெடுத்து தேர்வு எழுதியுள்ளனர்.
இதில், பொது அறிவுப்பிரிவில் 60 கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இது தமிழ் வழி பயின்றவர்களுக்கு, பெரும் அநீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை தேர்வு நடந்தபோது, தமிழிலும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கப்பட்ட நடைமுறைக்கு மாறாக, ஆங்கிலத்தில் மட்டுமே 60 கேள்விகள் இந்தமுறை கேட்கப்பட்டது. இது தொடர்பாக, தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தவேண்டுமென்று கோரிக்கை பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதைப்போன்றே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழில் தேர்வெழுத அனுமதி கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது சிறிதும் இரக்கமின்றி காவல்துறையை வைத்து தடியடி தாக்குதலை நடத்தியதோடு, அவர்கள் மீது பொய் வழக்கையும் புனைந்துள்ளனர்.
நீட் தேர்வு முறையில், தமிழ் வழி பாடம் படித்தவர்களுக்கு, பெரும் பாதகத்தை மத்திய அரசு செய்ததென்று, ஒட்டுமொத்த தமிழகமுமே குற்றம்சாட்டி வரும் நிலையில், மாநில அரசே இதைப்போன்ற கொடுமையை செய்வது பலருடைய வாழ்க்கையை கேள்விக்குரியாக்கி உள்ளது.
தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டதின் பொன்விழா ஆண்டு கொண்டாடுகிறோம் என்று போலித்தனமாக கொண்டாடும், இந்த எடப்பாடி பழனிசாமி அரசின் தமிழ்பற்று என்ன என்பதும் இப்பிரச்சினைகளில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தொடர்ந்து மாணவ விரோத போக்கை கையாண்டுவரும் எடப்பாடி பழனிசாமியின் அரசிற்கும், மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறைக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தால், 12 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட காவல்துறையின் தொழில்நுட்ப உதவி ஆய்வாளருக்கான தேர்வில், 55 ஆயிரம் பேர் பங்கெடுத்து தேர்வு எழுதியுள்ளனர்.
இதில், பொது அறிவுப்பிரிவில் 60 கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இது தமிழ் வழி பயின்றவர்களுக்கு, பெரும் அநீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை தேர்வு நடந்தபோது, தமிழிலும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கப்பட்ட நடைமுறைக்கு மாறாக, ஆங்கிலத்தில் மட்டுமே 60 கேள்விகள் இந்தமுறை கேட்கப்பட்டது. இது தொடர்பாக, தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தவேண்டுமென்று கோரிக்கை பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதைப்போன்றே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழில் தேர்வெழுத அனுமதி கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது சிறிதும் இரக்கமின்றி காவல்துறையை வைத்து தடியடி தாக்குதலை நடத்தியதோடு, அவர்கள் மீது பொய் வழக்கையும் புனைந்துள்ளனர்.
நீட் தேர்வு முறையில், தமிழ் வழி பாடம் படித்தவர்களுக்கு, பெரும் பாதகத்தை மத்திய அரசு செய்ததென்று, ஒட்டுமொத்த தமிழகமுமே குற்றம்சாட்டி வரும் நிலையில், மாநில அரசே இதைப்போன்ற கொடுமையை செய்வது பலருடைய வாழ்க்கையை கேள்விக்குரியாக்கி உள்ளது.
தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டதின் பொன்விழா ஆண்டு கொண்டாடுகிறோம் என்று போலித்தனமாக கொண்டாடும், இந்த எடப்பாடி பழனிசாமி அரசின் தமிழ்பற்று என்ன என்பதும் இப்பிரச்சினைகளில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தொடர்ந்து மாணவ விரோத போக்கை கையாண்டுவரும் எடப்பாடி பழனிசாமியின் அரசிற்கும், மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறைக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






