search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sumanagali Pooja"

    • கோவில் முன்மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலை முன்பு பெண்கள் சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்தனர்.
    • இன்று மாலை 1008 திருவிளக்குபூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுடலை ஆண்டவர் இந்து மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மெகா மியூசிக் நைட் இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடந்து வருகிறது. 2-ம் நாள் கொடைவிழாவான நேற்று இரவு சுடலை ஆண்டவர் மகளிர் சேவா சங்கம் சார்பில் 1008 சுமங்கலி பூஜை நடந்தது.

    கோவில் நிர்வாகி சேம்பர்செல்வராஜ் தலைமை யில் திசையன்விளை பேரூராட்சி தலைவரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான வக்கீல் ஏ.கே.சீனிவாசன் மாங்கல்ய பொருட்கள் அடங்கியதாம்பூலத்தை கொடுத்து சுமங்கலி பூஜையை தொடங்கிவைத்தார்.

    கோவில் முன்மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலை முன்பு பெண்கள் சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்தனர். விழாவில் தொழில் அதிபர்கள் தங்கையா கணேசன், கே.டி.பி.ஆர்.திவாகர், பாஸ்கர், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் புஸ்ப லெட்சுமி கனகராஜ், கடை வியா பாரிகள் சங்க செயலாளர் ஜெயராமன், வக்கீல் பழனி சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    கொடைவிழாவில் இன்று மாலை 1008 திருவிளக்குபூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுடலை ஆண்டவர் இந்து மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மெகா மியூசிக் நைட் இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழா தொடர்ந்து 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. ஏற்பாடு களை கோவில் நிர்வாகி சேம்பர்செல்வராஜ் செய்துள்ளார்.

    ×