என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழாவில் 1008 சுமங்கலி பூஜை
- கோவில் முன்மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலை முன்பு பெண்கள் சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்தனர்.
- இன்று மாலை 1008 திருவிளக்குபூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுடலை ஆண்டவர் இந்து மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மெகா மியூசிக் நைட் இன்னிசை கச்சேரி நடக்கிறது.
திசையன்விளை:
திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடந்து வருகிறது. 2-ம் நாள் கொடைவிழாவான நேற்று இரவு சுடலை ஆண்டவர் மகளிர் சேவா சங்கம் சார்பில் 1008 சுமங்கலி பூஜை நடந்தது.
கோவில் நிர்வாகி சேம்பர்செல்வராஜ் தலைமை யில் திசையன்விளை பேரூராட்சி தலைவரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான வக்கீல் ஏ.கே.சீனிவாசன் மாங்கல்ய பொருட்கள் அடங்கியதாம்பூலத்தை கொடுத்து சுமங்கலி பூஜையை தொடங்கிவைத்தார்.
கோவில் முன்மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலை முன்பு பெண்கள் சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்தனர். விழாவில் தொழில் அதிபர்கள் தங்கையா கணேசன், கே.டி.பி.ஆர்.திவாகர், பாஸ்கர், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் புஸ்ப லெட்சுமி கனகராஜ், கடை வியா பாரிகள் சங்க செயலாளர் ஜெயராமன், வக்கீல் பழனி சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்
கொடைவிழாவில் இன்று மாலை 1008 திருவிளக்குபூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுடலை ஆண்டவர் இந்து மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மெகா மியூசிக் நைட் இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழா தொடர்ந்து 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. ஏற்பாடு களை கோவில் நிர்வாகி சேம்பர்செல்வராஜ் செய்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்