என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SUICIDE தற்கொலை"

    • மகன் கைது செய்யப்பட்டதால் விரக்தியில் இருந்த ஆசைத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
    • மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரம் காந்தாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 45). இவருக்கு வைரமணி என்ற மனைவியும், கவுதம் என்ற மகனும் தாரணி என்ற மகளும் உள்ளனர். ஆசைத்தம்பி ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதம் திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனால் மன வேதனையில் இருந்த ஆசைத்தம்பி 3 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். அவரது மனைவி தேடிப்பார்த்தபோது எங்கே உள்ளார்? என தெரியவில்லை. இந்நிலையில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் ஆட்டோவுக்குள் ஆசைத்தம்பி இறந்து கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது.

    இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகன் கைது செய்யப்பட்டதால் விரக்தியில் இருந்த ஆசைத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஷம் சாப்பிட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 70). இவர்  சம்பவத்தன்று தோட்டத்திற்கு தெளிப்பதற்காக வைத்தி ருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். 

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, புதுக்கோட்டை மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ராஜாமணி உயிரிழந்தார். 

    இச்சம்பவம் குறித்து  குறித்து கீரமங் கலம் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×