search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide by jumping"

    • குடிப்பதற்கு தாய் தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கர ளவாடி தேவி நகரை சேர்ந்த வர் பசுவராஜ் (60). திருமண மாகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தந்தையுடன் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் லிங்கண்ணா (32). கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் லிங்கண்ணாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடிப்பதற்கு தாய் தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று வேலைக்கு செல்லா மல் கரளவாடி பஸ் நிறுத்தம் அருகே இரவில் உட்கார்ந்து இருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த லிங்கண்ணா குடிப்பதற்கு மீண்டும் பெற்றோரிடம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.

    பின்னர் லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார். உனது சாப்பாடு எனக்கு தேவை இல்லை. குடிப்பதற்கு பணம் தரவில்லை என்றால் இனிமேல் வீட்டுக்கு வர மாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வீட்டின் பின்பக்கம் உள்ள குளத்தை நோக்கி லிங்கண்ணா வேகமாக ஓடினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகன் பின்னால் வேகமாக ஓடினர். ஆனால் அதற்குள் லிங்கண்ணா குளத்தில் குதித்து விட்டார். இதனால் பதறிய அவரது பெற்றோர் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் லிங்கண்ணா குளத்தில் மூழ்கி இறந்து விட்டார்.

    இது குறித்து சத்திய மங்கலம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் தேடிலிங்கண்ணாவை பிணமாக மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×