search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sub Inspector Arrested"

    • எல்லைப்பகுதியான குமுளியில் இந்த ஆன்லைன் பதிவை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும். இதற்காக அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் ரூ.1000 லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
    • அய்யப்ப பக்தர் கொடுத்த பணத்தை வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரையும் மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    சபரிமலையில் தற்போது மண்டல பூஜைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர். இவர்கள் தமிழக - கேரள எல்லையில் குமுளி வழியாக செல்கின்றனர். இதனால் இந்த சாலையில் வாகனங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

    கேரளாவிற்குள் நுழையும் இந்த வாகனங்களுக்கு தற்போது ஆன்லைனில் பெர்மிட் பதிவு செய்யப்படுகிறது. எல்லைப்பகுதியான குமுளியில் இந்த ஆன்லைன் பதிவை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும். இதற்காக அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் ரூ.1000 லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஷாஜி ஜோஸ் தலைமையிலான போலீசார் தமிழக பகுதிக்கு வந்து அய்யப்ப பக்தர்களுடன் பக்தர்கள் போல் சென்றனர். அப்போது எல்லையில் உள்ள கேரள சோதனைச்சாவடியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், அலுவலக உதவியாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பணியில் இருந்தனர்.

    வாகனத்துக்கு ஆன்லைன் பதிவு இருந்தும் அவர்களிடம் ரூ.1000 லஞ்சம் கேட்டனர். அப்போது அய்யப்ப பக்தர் கொடுத்த பணத்தை வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரையும் மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் ஏற்கனவே பக்தர்களிடம் வசூல் செய்து வைத்திருந்த ரூ.5000 ஆயிரம் லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    அய்யப்ப சீசன் களைகட்டி வரும் நிலையில் பக்தர்களிடம் போலீசார் லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தொடர்ந்து போலீசார் இது போன்ற சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிறுமிக்கு 13 வயதில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
    • கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அம்பத்தூர்:

    ஆலந்தூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டிய ராஜ்(50). இவர் சென்னை மாநகர காவல்துறையில் வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்து மகளுடன் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் அடிக்கடி இளம்பெண்ணை சந்தித்து வந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த காதலியின் மகள் மீதும் அவருக்கு ஆசை ஏற்பட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிறுமிக்கு 13 வயதில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

    இதனை வெளியில் சொல்ல முடியாமல் இளம்பெண்ணும், அவரது மகளும் தவித்து வந்தனர். தற்போது அந்த சிறுமி, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஆனாலும் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜின் ஆசை மேலும் அதிகரித்தது. அவர், கல்லூரி மாணவிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.

    இதனைப் பொறுக்க முடியாத மாணவின் தாய், சப்-இன்ஸ்பெக்டர் மீது வில்லிவாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ், கணவரை பிரிந்த இளம்பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்தது தெரிந்தது.

    மேலும் இளம்பெண்ணின் மகளான கல்லூரி மாணவிக்கு, சிறுமியாக இருந்த காலகட்டத்தில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×