search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student self immolation"

    சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் மன முடைந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் கிரேன் ஆப்ரேட்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெங்கடேஸ்வரி. இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது15). 

    இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கோவிந்தசாமி பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். கடந்த 20-ந்தேதி அன்று பள்ளியில் கோகுலகிருஷ்ணனை சகமாணவர்கள் கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த  கோகுலகிருஷ்ணன் விஜயமங்கலத்தில் அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் கோகுலகிருஷ்ணனை சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை அருகே மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மனவேதனையில் இருந்த 10-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜய மங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கோவிந்தசாமி.

    இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அண்ணா நகர் புத்தூர் ஆகும். விஜயமங்கலத்தில் தங்கி கிரேன் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    மகன் கோகுல கிருஷ்ணன் (வயது 15) விஜயமங்கலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பரீட்சையில் இவன் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் கோகுல கிருஷ்ணன் வேதனையில் இருந்துள்ளான்.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு 10 மணிக்கு மாணவன் கோகுல கிருஷ்ணன் தனது வீட்டில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து விட்டான்.

    உடல் முழுவதும் கருகிய அவனை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு கோவிந்தசாமி தனது சொந்த மாவட்டமான கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக மகனை சேர்த்தார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாணவன் கோகுல கிருஷ்ணன் இறந்து விட்டான்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×