என் மலர்
நீங்கள் தேடியது "student cell phone"
வில்லிவாக்கத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:
நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ஷியாம்சுந்தர். இவரது நண்பர் வெங்கடேஷ்குமார். இருவரும் கல்லூரி மாணவர்கள்.
நேற்று இரவு ஷியாம்சுந்தர், வெங்கடேஷ்குமாருடன் வில்லிவாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.
பின்னர் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகே உள்ள செல்போன் கடைக்கு சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் ஷியாம்சுந்தர், வெங்கடேஷ்குமாரை தாக்கினர்.
பின்னர் 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே காலி மைதானத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு கல்லூரி மாணவர்களை தாக்கி செல்போன், பணம், மோதிரத்தை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து ஐ.சி.எப். போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.






