search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St.Sebastian Church"

    • வள்ளியூர் அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அதனைத்தொடர்ந்து வாண வேடிக்கையும், இரவு 11.30 மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று இரவு தேர்பவனி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மறைமாவட்டமுன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து வாண வேடிக்கையும், இரவு 11.30மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெற்றது. இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகுகாணிக்கை செலுத்திவழிபடுட்டனர். 10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது. மதியம் 12மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர் மற்றும் கொடியிறக்கம் நடைபெறுகிறது. நாளை மாலை 6.30 மணிக்கு வடக்கூர் புனித அந்தோணியார் கெபில் ஜெபமாலை, திருப்பலி மற்றும் அசன விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் தர்மகர்த்தா அருள்செபஸ்தியான், பொருளாளர் மகான் அந்தோணி, செயலாளர் லியோ ஜெப நீலன், பங்கு தந்தை டென்ஸில் ராஜா, நிர்வாக பொறுப்புத் தந்தை அருள்மணி, பங்கின் அருட் சகோதரிகள், முத்துலாபுரம் தூய செபஸ்தியார் திருத்தல நிர்வாகக்குழு இறை மக்கள் செய்துவருகின்றனர்.

    ×