search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strict Order"

    • திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன.
    • கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருப்பார்கள். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் புதியதாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிநாட்களில் மதியம் வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

    அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும் காரணத்தை அங்குள்ள தகவல் பலகையில் எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும். கட்டாயம் தொடர்பு எண் எழுதி வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×