search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "step on power lines"

    கரும்பு பயிரிடப்பட்ட நிலத்தில் உடல் கருகிய நிலையில் உடல் கிடப்பதை பார்த்தனர். அருகே சென்றபோது மின் கம்பி அறுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கட

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்த சி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 56). விவசாய தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் விவசாய பணிக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று காலை வீட்டிலிருந்து சென்றார்.நேற்று மாலை வெகுநேரமாகி யும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தார் பழனிவேலை தேடினர். விளைநிலங்களில் இரவு நேரத்தில் தேடும் பணியை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டதால், காலை தேடிக் கொள்ளலாம் என்று வீடு திரும்பினர்.இன்று அதிகாலை முதல் அவர் பணிக்கு சென்ற விளைநில பகுதியில் மீண்டும் தேடும் பணியில் பழனிவேலின் குடும்பத்தார் ஈடுபட்டனர்.அப்போது, அங்கிருந்து கரும்பு பயிரிடப்பட்ட நிலத்தில் உடல் கருகிய நிலையில் உடல் கிடப்பதை பார்த்தனர். அருகே சென்றபோது மின் கம்பி அறுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இது தொடர்பாக மின் வாரியத்திற்கும், கருவேப்பிலங்குறிச்சிபோலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மின் விநியோகத்தை நிறுத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கருகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றினர். இதனைப் பார்த்த பழனிவேலுவின் குடும்பத்தார், இறந்தவர் பழனிவேல் என்பதை உறுதி செய்தனர்.மேலும், அங்கு அவர்கள் கதறியழுத காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், பிரேத பரிசோதனைக்காக பழனிவேலுவின் உடலை விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விவசாய கூலி வேலைக்கு சென்றவர் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×