search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "started the protest"

    • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் முதல் விதிப்படி பணி செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
    • இதில் 732 பேர் ஈடுபடுகிறார்கள்.

    ஈரோடு:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று முதல் விதிப்படி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டம் வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:

    ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு இரவு நேர ஆய்வு கூட்டம், விடுமுறை நாளில் கள ஆய்வுக்கு அழைப்பதை கைவிட வேண்டும். அனைத்து வட்டாரத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பிற துறை பணிகளில் ஈடுபடும் போது இத்துறை க்கான பணிகளை செய்ய முடியவில்லை. இவற்றை கைவிட வலியுறுத்தி ஏற்க னவே 3 கட்ட போராட்டம் நடத்தினோம்.

    கூடுதல் கலெக்டர் பேச்சு வார்த்தை யை ஏற்று போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் 5 அலுவலர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையாக சார்ஜ் வழங்கி உள்ளனர்.

    எனவே விதிப்படி வேலை என்று கோரிக்கை யை வலியுறுத்தி போராட்ட த்தை தொடங்கி உள்ளோம். வரும் 9-ந் தேதி வரை இந்த போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும்.

    இதில் 732 பேர் ஈடுபடுகிறார்கள். பணி நேரத்துக்கு பின் நடக்கும் ஆய்வு கூட்டம், காணொளி கூட்டங்கள், கள ஆய்வுகளை தவிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×