search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sruthanjay Narayanan"

    • 2020ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகள், வெளிமாநிலங்களில் பயிற்சி பெற்று வந்தனர்.
    • ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் கடந்த, 2020ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகள், வெளிமாநிலங்களில் பயிற்சி பெற்று வந்தனர். பயிற்சி நிறைவடைந்த நிலையில், பல்வேறு அரசுத்துறைகளிலும் பணியாற்றி வந்தனர். புதுடில்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களில், மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன்ஜெய் நாராயணன், திருப்பூர் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் வருவாய் கோட்டத்தின் சப்-கலெக்டராக நியமிக்கப்ப ட்டுள்ள ஸ்ருதன்ஜெய் நாராயணன், சினிமா நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×