search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special unit"

    • மதுரை சித்திரை பொருட்காட்சி 13-ந்தேதி முடிவடைகிறது. இதுவரை 1.80 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.
    • மாணவர்கள் இந்த சிறப்பு சலுகையை 13-ந்தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட் காட்சியை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பொருட்காட்சி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி யன்று தொடங்கியது.

    இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.

    மேலும் மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப் பட்டுள்ளன. அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றின் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறை களின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குள் இடம் பெற்றுள்ளன.

    மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டன.

    அதேபோல இளை ஞர்கள் மற்றும் குழந்தை களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. மேலும், தினந்தோறும் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த பொருட்காட்சி தினந்தோறும் மாலை 3.45 மணி முதல் இரசு 9.30 மணி வரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15 ரூபாயும், சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதுவரை அரசுப் பொருட் காட்சியை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

    இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட 30 ஆயிரம் பார்வையாளர்கள் அதிகம் ஆகும். இந்தப் பொருட்காட்சி வருகிற வருகிற 13-ந்தேதியன்று நிறைவடைகிறது.

    பொருட்காட்சியை கண்டுகளிக்க வரும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை காண்பித் தால் அவர்களுக்கு ராட்டி னம் உட்பட விளையாட்டு நிகழ்வுகளில் சிறப்பு சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மாணவர்கள் இந்த சிறப்பு சலுகையை 13-ந்தேதி வரை பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரி வித்துள்ளது.

    தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை காவல்துறை உருவாக்கியுள்ளது. #CrimesAgainstWomen #TNPolice
    சென்னை:

    பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சமூக வலைத்தள பயன்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும்.


    புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட உள்ளனர். சிபிஐ, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தொகுப்பையும் இந்த அமைப்பு உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CrimesAgainstWomen #TNPolice

    ×