search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவு
    X

    பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவு

    தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை காவல்துறை உருவாக்கியுள்ளது. #CrimesAgainstWomen #TNPolice
    சென்னை:

    பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சமூக வலைத்தள பயன்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும்.


    புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட உள்ளனர். சிபிஐ, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தொகுப்பையும் இந்த அமைப்பு உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CrimesAgainstWomen #TNPolice

    Next Story
    ×