search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special projects"

    • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தில் வருகிறார்.
    • நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வரை 45,538 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பல்வேறு திட்டங்களை செயல்படுத்தில் வருகிறார். மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தை அரசு அமைத்துள்ளது.

    முதல் -அமைச்சரின் ஆணைக்கிணங்க நோய் தடுப்பு நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் வியாழக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வரை 45,538 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் 29,620 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை விண்ணப்பம் பெறப்பட்டு அதில் 15,838 நபர்களுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 55 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளது.

    10 வயதிற்கு மேற்பட்ட மாற்று த்திறனாளி களுக்கு 29,805 பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவுசார் குறைபாடு டையோர், கடுமை யாக பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்று த்திற னாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.1500 லிருந்து ரூ.2000 உயர்த்தப்பட்டு 4,357 பயனா ளிகள் பயன்பெற்று வருகிறார்கள். அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியா ளரை வைத்துக்கொள்ள கூடுதலாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் 40 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 1 முதல் பட்ட மேற்படிப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டிற்கு ரூ.1000 முதல் ரூ.7000 வரை வழங்கப்பட்டு வருகிறது. திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.3.75 லட்சம்

    வழங்கபட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதி யாண்டில் 197 பார்வை யற்றோருகளுக்கும், 75 காது மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கும், 45 அறிவுசார் குறைபாடு டையோருக்கும் மற்றும்

    98 கை, கால் பாதிக்கப்பட்டோ ருக்கும் ஆக மொத்தம் 415 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    படித்த வேலை வாய்ப்பற்றோருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் நிதி

    யாண்டிற்கு ரூ.10,32,000 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு

    இதுவரை 84 மாற்றுத்தி றனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.78,100 வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் மேம்பட சிறு மற்றும் குறுந்தொழில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.10,00,000 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 16 மாற்றுத்தி றனாளிகளுக்கு ரூ.3,83,332 வழங்கப்பட்டுள்ளது.

    பயனாளி பேட்டி

    மாற்றுத்திறளாளி நலத்துறையின் மூலம் பயனடைந்த பரமத்தி வேலூரை சேர்ந்த

    மாற்றுத்திறனாளி சந்திர சேகர் கூறிகையில் நான் பிறந்ததிலிருந்து நடக்க முடியாமல் இருக்கேன். தற்போது எனக்கு பேட்டரி பொருத்திய நான்கு சக்கர வாகனம் அளித்துள்ளார். இதனால் எனது வேலையை செயவதற்கு சுலபமாக உள்ளது. எனக்கு பேட்டரி பொருத்திய நான்கு சக்கர

    வாகனம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

    தெலுங்கானாவில் வேளாண் வளர்ச்சிக்காகவும், விவசாயம் மேம்படவும் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா முதல்-மந்திரியாக கே.சந்திரசேகரராவ் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் விவசாயம் மேம்பட பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன்படி அவர் 50-க்கும் மேற்பட்ட சலுகைகள், திட்டங்களை வழங்கியுள்ளார்.குறிப்பாக 2018-19-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அவரது அரசு 26 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ரூ.3,728 கோடி இலவச மின்சாரத்துக்காகவும் ரூ.20,820 கோடி விவசாயம் மற்றும் அதை சார்ந்த பிரிவுகள், கிராம மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    நிதி ஆயோக் அமைப்பின் விவசாய விற்பனை மற்றும் விவசாய சீர்திருத்த குறியீட்டின்படி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கும் 10 மாநிலங்களின் வரிசையில் தெலுங்கானாவும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விவசாயிகளின் நலனுக்காக தெலுங்கானாவில் 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 2,58,195 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.



    இதன்படி 35.3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. குறைந்த வட்டி விகிதத்தில் விவசாய கடன் வழங்கப்படுகிறது. இவை தவிர 50 சதவீத மானியம், போக்குவரத்து வரி தள்ளுபடியுடன் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்கப்படுகிறது.

    விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தடையின்றி வழங்கப்படுகிறது. கிராமங்களில் 25 விவசாயிகள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாக விவசாயிகளுக்கு அவை வினியோகம் செய்யப்படுகின்றன. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

    தெலுங்கானா அரசின் ‘ரைது பந்து’ என்ற புதிய திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் சாகுபடி தொடங்கும்முன்பு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் நிதி வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு இந்த தொகை நேரடியாக அனுப்பப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் அரசு கிடங்குகளில் இருப்பு வைத்துள்ள விவசாய பொருட்களின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் அளவுக்கு (அதிகபட்சம் ரூ.2 லட்சம்) விவசாயிகள் வட்டியில்லா கடன் பெற முடியும்.

    வன அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் முலுகு பகுதியில் ரூ.50 கோடியில் வன கல்லூரி தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. 22.47 லட்சம் டன் விளைபொருட்களை சேமித்து வைக்கும் வகையில் 364 கிடங்குகளை கட்டி வருகிறது. சொட்டு நீர் பாசனம், பசுமைக்குடில் விவசாயம் ஆகியவற்றை ஊக்குவிக்க மானியங்கள் வழங்கப்படுகின்றன.

    இன்டர்நெட், ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகளுக்கு விளைபொருட்களின் இருப்பு, விலை உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும் குறைகளை தீர்க்க 1800 599 4199 என்ற தொலைபேசி எண்ணும் தொடங்கப்பட்டு உள்ளது.

    விவசாய அபிவிருத்தி, தற்கொலை தடுப்பு, குழந்தைகள் கல்வி, கடனுதவி, காப்பீடு, பெண்கள் மேம்பாடு, சுகாதாரம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தெலுங்கானா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×