search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Grievance Redressal Camp"

    • சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு செய்ய உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் வஞ்சிப்பாளையம் கிராமம், தாராபுரம் தாலுகாவில் கொக்கம்பாளையம் கிராமம், திருப்பூர் வடக்கு தாலுகாவில் கணக்கம்பாளையம் கிராமம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் இடுவாய் கிராமம், உடுமலை தாலுகாவில் ஆமந்தக்கடவு கிராமம், ஊத்துக்குளி தாலுகாவில் ஊத்துக்குளி கிராமம் ஆகியவற்றுக்கு அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முகாம் நடைபெற உள்ளது.

    காங்கயம் தாலுகாவில் மங்கலப்பட்டி கிராமத்துக்கு முத்தாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில் மைவாடி கிராமத்துக்கு நரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், பல்லடம் தாலுகாவில் கோடங்கிப்பாளையம் கிராமத்துக்கு காரணம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் முகாம் நடக்கிறது.

    அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், தனி வருவாய் ஆய்வாளர்கள் முகாமில் கலந்து கொண்டு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு செய்ய உள்ளனர். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், நகல் பெற விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • 13-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது.
    • மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் 13-ந்தேதி நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நாைள மறுநாள் 13-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாமில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படவுள்ளது.

    ஆகவே, பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ள இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:- அவிநாசி வட்டத்தில் தொரவலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் வட்டத்தில் குண்டடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் எல்லப்பாளையம் புதூரில் உள்ள நிழலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மடத்துக்குளம் வட்டத்தில் நீலம்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் வட்டத்தில் வே.கள்ளிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூா் வடக்கு வட்டத்தில் வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் முதலிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உடுமலை வட்டத்தில் தின்னப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில் விருமாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    • சான்றுகளை வழங்கினர்.
    • புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

    கோத்தகிரி,

    நீலகிரி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கோத்தகிரியில் நடைபெற்றது. முகாமை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி தொடங்கி வைத்தார். இதில் பொது டாக்டர்கள், காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், கண், மன நல டாக்டர்கள், எலும்பு, மூட்டு சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் சதவீதத்தை சோதனை செய்து, அதற்கான சான்றுகளை வழங்கினர். முகாமில் புதிய பழங்குடியின மாற்றுத்திறனாளிகள் 20 பேர் உள்பட மொத்தம் 37 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 72 மாற்றுத்திறனாளிகளுக்கு பழைய அடையாள அட்டைகளுக்கு பதிலாக, புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில் மாற்றுத்திறனாளிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×