என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "S.P.B.Charan"

    • எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 4-வது நினைவு தினம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு எஸ்.பி.பி.சரண் நன்றி.

    சென்னை:

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

    இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார்.


    அவரது 4-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" என பெயரிடப்படும் என்று அறிவித்தார்.

    இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகன் எஸ்.பி.பி. சரண் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    • குரல் உணர்வுப்பூர்வமாக இருக்காது.

    ஏ.ஐ. தொழில் நுட்பம் சினிமா துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொழில் நுட்பத்தில் மறைந்த நடிகர்களை மீண்டும் நடிக்க வைக்கவும், மறைந்த பாடகர்கள் குரலை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கவும் முடிகிறது.

    விஜய்யின் 'தி கோட்' படத்தில் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் பாடல் இடம்பெற்றது. ரஜினிகாந்தின் 'லால் சலாம்' படத்தில் மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா, ஷாகில் ஆகியோரின் குரலில் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி இருந்தார்.

    'வேட்டையன்' படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை பயன்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்த அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எஸ்.பி.பி.சரண் கூறும்போது, "ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் எனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை பயன்படுத்த அனுமதி கேட்டு பலர் என்னிடம் பேசி வருகிறார்கள்.

    ஆனால் நான் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டேன். ஏ.ஐ. மூலம் அவரது குரலை கேட்க எங்களுக்கு விருப்பம் இல்லை. ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்தும் குரல் உணர்வுப்பூர்வமாக இருக்காது'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×