காம்தார் சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர்: முதலமைச்சருக்கு எஸ்.பி.பி.சரண் நன்றி

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 4-வது நினைவு தினம்.முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு எஸ்.பி.பி.சரண் நன்றி.
காம்தார் சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர்: முதலமைச்சருக்கு எஸ்.பி.பி.சரண் நன்றி
Published on

சென்னை:

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார்.

அவரது 4-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" என பெயரிடப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகன் எஸ்.பி.பி. சரண் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com