search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southern Mandal Bharatiya Janata"

    • கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளரும் ,தெற்கு மண்டல் பார்வையாளருமான உமரி சத்தியசீலன் கலந்து கொண்டு பேசினார்.
    • குடோனில் உள்ள தானியங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல் பாரதீய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் அய்யன் கோவில் தெருவில் நடைபெற்றது. தெற்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார், மண்டல் பொதுச் செயலாளர் பிரபு, செயற்குழு உறுப்பினர் விந்தியா முருகன், வக்கீல் பிரிவு மாவட்டச் செயலாளர் ஜெயராம்,விவசாய அணி முருகன், மாநில திட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளரும் தெற்கு மண்டல் பார்வையாளருமான உமரி சத்தியசீலன் கலந்து கொண்டு பேசினார்.

    தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    கூட்டத்தில், 53 வது வார்டு ஆனந்திநகர் பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் சாலை அமைக்காமல் உள்ளதை கண்டித்தும், உடனடியாக சாலை அமைக்கக் கோருதல், முத்தையாபுரம் பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்த மாநகராட்சி பாராட்டியும், அங்கு 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரவும், அமுதா நகர் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக மக்கள் குடியிருக்கும் பகுதியின் நடுவில் சிலிண்டர் குடோன் அமைத்து மக்களை அச்சுறுத்தி வரும் தனியார் சிலிண்டர் குடோனை அகற்றக் கோருத்தல், 52-வது வார்டு கிருஷ்ணா நகர் பேரின்நகர் மேல்புறத்தில் குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் நீண்ட நாட்களாக தானியங்கள் கிடப்பில் கிடப்பதால் விஷ பூச்சிகள் உருவாகி பொதுமக்களை அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே குடோனில் உள்ள தானியங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

    இதில் தெற்கு மண்டல துணை தலைவர்கள் அருண் பாபு, முருகேசன், இளைஞர் அணி மாவட்ட பொது செயலாளர் குலசை ரமேஷ், வர்த்தகப்பிரிவு தெற்கு மண்டல தலைவர் வீரமணி, ஓ.பி.சி. அணி மண்டல் தலைவர் துர்க்கையப்பன், மகளிர் அணி மண்டல் தலைவி செல்வி,துணைத் தலைவி சிலம்பொழி மற்றும் நிர்வாகிகள் சங்கரநாராயணன், முனியசாமி, முத்துசாமி,பாலா, ராஜ்குமார், அஜய், முருகேசன், ராமலட்சுமி மற்றும் கிளை தலைவர்கள் வெள்ளை பாண்டி ராஜகோபால் மாடசாமி வீரநாயக்கன்தட்டு வேல் சுடலை சவுந்தர்ராஜன் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×