search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soil Lamps"

    • வள்ளியூர் அருகே உள்ள மாவடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மண்பானை தொழிலாளர்கள் மண் விளக்குகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கடந்த 2ஆண்டுகள் கொரோனா காலகட்டத்தில் திரு கார்த்திகை களையிழந்து காணப்பட்டதாலும் இந்த ஆண்டும் மண் கிடைக்காமல் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் களையிழந்து காணப்படுவதாக மண்பானை தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    வள்ளியூர்:

    கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று பொதுமக்கள் தங்களது வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். வள்ளியூர் அருகே உள்ள மாவடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மண்பானை தொழிலாளர்கள் மண் விளக்குகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இங்குள்ள தொழிலாளர்கள் நம்பியாற்று தண்ணீரை வைத்து சிறிய மண் விளக்குகள் மண்பானை உள்ளிட்ட பொருட்கள் செய்வதால் நெல்லை மாவட்டத்தில் இதற்கு தனி மவுசு உண்டு.

    இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படு கின்றன.

    சில வருடங்களாக அரசு மண் எடுப்பதற்கு தடை விதித்த நிலையில் மண்ணில்லாமல் திருவிளக்கு உற்பத்தி செய்ய முடியாமலும் போதிய வருமானம் இல்லாமலும் மண் பானைத் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அரசு அறிவித்த நிவாரணம் கூட தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் கண்ணீர் மல்க அவர்கள் தெரிவித்தனர்.

    தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை செய்யும் இவர்கள் தற்போதைய காலத்தில் உரிய மண் எடுக்க அனுமதி அளித்தால் எங்களுடைய வாழ்வாதாரம் தடைப்படாமல் தொழிலை நீடிப்போம் என்றும் தெரிவித்தனர். கடந்த 2ஆண்டுகள் கொரோனா காலகட்டத்தில் திரு கார்த்திகை களையிழந்து காணப்பட்டதாலும் இந்த ஆண்டும் மண் கிடைக்காமல் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் களையிழந்து காணப்படுவதாக மண்பானை தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    ×