search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sohrabuddin Sheikh"

    சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் 22 பேரும் விடுதலையானது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். #RahulGandhi #SohrabuddinSheikh ##SohrabuddinEncountercase
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பிடிபட்ட சொராபுதீன் சேக் குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி கவுசர், உதவியாளர் துல்சி பிரஜாபதி ஆகியோரும் கொல்லப்பட்டனர். இது போலி என்கவுண்ட்டர் என்று புகார் கூறப்பட்டதால் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் மும்பை சி.பி.ஐ. கோர்ட்டு, குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி 22 பேரையும் விடுதலை செய்தது.

    இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில், “யாரும் கொலை செய்யவில்லை... ஹரென் பாண்ட்யா, துல்சி பிரஜாபதி, லோயா, பிரகாஷ் தோம்ப்ரே, ஸ்ரீகாந்த் கண்டல்கர், கவுசர், சொராபுதீன் சேக், அவர்கள் வெறுமனே இறந்துவிட்டார்கள்” என்று கூறியுள்ளார். #RahulGandhi #SohrabuddinSheikh #SohrabuddinEncountercase
     
    சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. #SohrabuddinEncountercase
    மும்பை:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக், அவரது மனைவி சவுசர்பி ஆகியோர் போலீஸ்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் என்று கூறி அவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த என்கவுண்டர் போலியாக நடத்தப்பட்டது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதன்பின்னர் சொராபுதீன் ஷேக்கின் உதவியாளர் துளசி பிரஜாபதியும் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவும் போலியாக நடந்த என்கவுண்டர் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த கவுண்டர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்த என்கவுண்டரில் குஜராத் மாநில அரசில் உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு அமித்ஷா கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த என்கவுண்டர் வழக்கு விசாரணை மும்பை சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டில் நடந்தது.

    சுமார் 500 பேர் சாட்சிகளாக பட்டியலிடப்பட்டனர். ஆனால் 210 பேர் மட்டுமே சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.

    அந்த குற்றப்பத்திரிகையில் அமித் ஷா மற்றும் ராஜஸ்தான் உள்துறை மந்திரியாக இருந்த குலாப்சந்த் கட்டாரியா பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அமித்ஷா, கட்டாரியா உள்பட 16 பேரை இந்த வழக்கில் இருந்து சி.பி.ஐ. கோர்ட்டு விடுவித்தது.



    மீதமுள்ள 22 பேர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்தது. சமீபத்தில் வக்கீல்கள் வாதம் முடிந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் இந்த என்கவுண்டர்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி தீர்ப்பை அறிவித்தார். அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். #SohrabuddinEncountercase
    ×