என் மலர்
நீங்கள் தேடியது "Sneh Rana"
- 13- வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
- கவுகாத்தியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா -இலங்கை அணிகள் மோதுகின்றன.
புதுடெல்லி:
13- வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் போட்டிகள் நடக்கிறது. கவுகாத்தியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா -இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் உலக கோப்பை போட்டி சவால் கள் நிறைந்து இருக்கும் என்றும், கோப்பையை வென்று கொடுப்பது மட்டுமே எங்களது இலக்கு என்றும், இந்திய வீராங்கனை சினே ரானா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சொந்த மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொட ரில் விளையாடுவது சுவாரசியமானதாகவும், சவாலானதாகவும் இருக்கும். சொந்த மண்ணில் ஆடுவது சிறப்பான உணர்வை அளிக்கிறது. நீண்ட ஆண்டுகளாக ஆடி வரும் ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான அணியில் விளையாட உள்ளது மேலும் சிறப்பான விஷயம். இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
மகளிர் பிரீமியர் லீக் வீராங்கனைகளுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது. உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுடன் இணைந்து மற்றும் அவர்களுக்கு எதிராக ஆடும் வாய்ப்பினை பிரீமியர் லீக் ஏற்படுத்திக் கொடுத்தது. வெளிநாட்டு வீராங்கனைகள் எவ்வாறு விளையாடுகிறார்கள் எவ்வாறு திட்டம் வகுக்கிறார்கள், முக்கியமான தருணங்களில் எவ்வாறு செயல்படுகிறார்கள் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக்கொள்ள உதவியது.
இவ்வாறு சினே ரானா கூறியுள்ளார்.
31 வயதான அவர் ஆல் ரவுண்டர் ஆவார்.
இந்திய அணி இதுவரை உலக கோப்பையை வென்றது கிடையாது. 2005 மற்றும் 2017-ல் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது.
- இந்தியா முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சென்னை:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.
ஸ்மிர்தி மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்னிலும் அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்திருந்தது.
இதற்கிடையே, நேற்று நடந்த இரண்டாம் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
அடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களில் ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் ஸ்நே ரானா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதன்மூலம் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் சூன் லூஸ் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 93 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. 105 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 373 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
சென்னை:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.
ஸ்மிர்தி மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சினே ரானா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதன்மூலம் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் சூன் லூஸ் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 93 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் கடைசி நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்து ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோல்வார்ட் 122 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய நாடின் டி கிளர்க் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 373 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 37 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி விளையாடிய சுபா- ஷபாலி ஜோடி விக்கெட் இழப்பின்றி இலக்கை கடந்தது. இதனால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகியாக சினே ரானா தேர்வு செய்யப்பட்டார்.






