search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snatching the chain"

    • சுப்பிரமணி. இவரது மனைவி கோமதி (வயது 41). இவர் நேற்று இரவு இவர் இருசக்கர வாகனத்தில் எடப்பாடி வந்துவிட்டு, மீண்டும் வீடு திரும்பினார்.
    • மர்மநபர், திடீரென கோமதியை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றி யத்துக்கு உட்ட பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கோமதி (வயது 41). இவர் நேற்று இரவு இவர் இருசக்கர வாகனத்தில் எடப்பாடி வந்துவிட்டு, மீண்டும் வீடு திரும்பினார்.

    கொங்கணாபுரம் அடுத்த ரெட்டிபட்டி கிருஷ்ணன் கோவில் அருகே, எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர், திடீரென கோமதியை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

    மர்ம நபர் தாக்கியதில் நிலைகுலைந்து கீழே சரிந்த கோமதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் கோமதியை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கி, மர்ம நபர் செயின் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதி யினரிடையே பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×