search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snake into house"

    சூளகிரி அருகே உத்தனபள்ளி பகுதியில் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேப்பனஹள்ளி:

     கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி உத்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சாந்தமோகன் (வயது 40), ஆசிரியர். இவரது மனைவி வைதேகி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் காலை வழக்கம்போல் வீட்டில் குழந்தைகளுடன் இருந்தனர்.

    சுமார் காலை 9 மணி அளவில் இவர்களது வீட்டிற்குள் 6 அடி நீளம் கொண்ட நாகபாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதை கண்டு அலறியடித்து அவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வந்தனர். பாம்பை பிடிக்க மக்கள் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. பின்பு சமூக ஆர்வலர்களால் ஓசூரில் உள்ள பாம்பு பிடி மன்னன் வெங்கடேஷ் (30) வரவழைக்கப்பட்டார். அவர் சில நிமிடத்துக்குள் பாம்பை வீட்டிற்கு வெளியில் வரவைத்து லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார்.

    பின்னர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    பாம்புகளை தொந்தரவு செய்ய வேண்டாம் பாம்பு பிடிக்க சிலர் குறைந்த அளவான தொகை பணம் தருவது உண்டு. அந்த பணத்தை ஓசூர் பகுதியில் உள்ள அனாதை இல்லத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்கு மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவை வாங்கி கொடுத்து விடுவேன் என்றார். மேலும்,  பாம்புகளை பார்த்தால் அதை  தொந்தரவு செய்ய வேண்டாம். எங்களை அழைத்தால்போதும். அதை பிடித்து காட்டில் விட்டு விடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு நாடார்மேடு பகுதியில் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு வீட்டுக்குள் புகுந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகளை நோக்கி படையெடுக்கும் பாம்புகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    குறிப்பாக ஈரோடு நாடார்மேடு பகுதி, முத்தம்பாளையம் ஹவுசிங்யுனிட், திண்டல் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சர்வ சாதாரணமாக பாம்புகள் நடமாட்டம் உள்ளது.

    இந்நிலையில் ஈரோடு நாடார்மேடு பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவர் வீட்டில் நேற்று சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.

    வீட்டின் பீரோ கீழ் பகுதியில் நெளிந்து கொண்ட இருந்த பாம்பை பார்த்த ரவிக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று சாரை பாம்பை பிடித்தனர்.

    பிடிப்பட்ட சாரை பாம்பு கொடிய வி‌ஷம் தன்மை கொண்டது என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.பின்னர் பாம்பை அடர்ந்த காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.

    ×