என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snake fight"

    • நல்லபாம்பு ஒன்றும், பெரிய சாரைபாம்பு ஒன்றும் சண்டையிட்டு கொண்டிருந்தன.
    • பாம்பு சண்டையை வீடியோ பதிவு செய்தவர்கள் அதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    இதனால் அணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. சங்கரன்கோவில்-புளியங்குடி சாலையில் கனகதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் அருகில் சிறிய குளம் ஒன்று காணப்படுகிறது.மழை காரணமாக அந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது.

    இந்நிலையில் இந்த குளத்தின் கரையோரத்தில் நேற்று மாலை பெரிய நல்லபாம்பு ஒன்றும், பெரிய சாரைபாம்பு ஒன்றும் சண்டையிட்டு கொண்டிருந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த பகுதியின் அருகிலேயே பள்ளி கூடம் ஒன்றும், கோவிலும் உள்ளது. அந்த வழியாக சென்ற சிலர் பாம்பு சண்டையை செல்போனில் வீடியோப் பதிவு செய்தனர்.

    சிறிது நேரம் கழித்து அந்த பாம்புகள் கரையில் இருந்து குளத்துக்குள் சென்றுவிட்டது.

    இந்நிலையில் பாம்பு சண்டையை வீடியோ பதிவு செய்தவர்கள் அதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா சார்பதிவாளர் அலுவலகத்தில் கீரியும், நாகபாம்பும் மோதியதால் ஊழியர்கள் சிதறி ஓடினர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் ஆவணங்கள், கோப்புகள் அதிகம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் பழமையான இங்குள்ள அறைகள் புதர்மண்டியும், சேதமடைந்தும், மழைநீர் உள்ளே கசிந்தவாறு உள்ளது.

    நேற்று ஊழியர் ஒருவர் ஆவணம் எடுக்க ஒரு அறையை திறந்தார். லைட்டை போட்டு ஜன்னலை திறந்துபோது நாகபாம்பு மீது கீரி ஆவேசமாக நின்றது. பாம்பும் பதிலுக்கு ‘உஸ்’ என்று சீற்றமடைந்து மோதியது. அதிர்ச்சியடைந்த ஊழியர் அறையை விட்டு ஓட்டம் பிடித்தார். இது குறித்து தகவல் கிடைத்தும் பெண் ஊழியர்கள் உள்பட பலர் சிதறி ஓடினர்.

    பின்னர் அங்குள்ள ஊழியர்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து பார்த்தனர். பின்னர் பாம்பையூம், கீரியையும் விரட்டி விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews

    ×