search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smoke Pollution"

    திருப்பதி கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு ஆர்.சி.புக், புகை மாசு சான்று கட்டாயம் என்றும் ஆவணங்கள் இல்லாவிட்டால் அனுமதியில்லை என்றும் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். #Tirupati #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    பக்தர்கள் வரும் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திருமலையிலும், திருப்பதி மலைப்பாதைகளிலும் விபத்துகள் நடக்கின்றன.

    இந்தநிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி உத்தரவின்பேரில், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் அலிபிரி டோல்கேட் மற்றும் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் முதலாவது மலைப்பாதையில் உள்ள 7-வது மைல் ஆகிய இடங்களில் தீவிர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வாகன ஓட்டிகளுக்கான லைசென்சு, ஆர்.சி.புத்தகம், புகை மாசு சான்று, சீட் பெல்ட், ஹெல்மெட், தகுதி சான்று ஆகியவை உள்ளதா? எனக் கேட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதிகாரிகள் கேட்கும் அனைத்துச் சான்றுகளும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதில் ஏதேனும் ஒரு சான்று இல்லையென்றாலும், அந்த வாகனத்தை திருமலைக்கு அனுமதிக்காமல் திருப்பி விடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tirupati #TirupatiTemple
    ×