search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smart City Scheme"

    • புதிதாக கட்டப்பட உள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
    • முதலமைச்சரின் தஞ்சை வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் விதமாக மாநகர் முழுவதும் தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருச்சியில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகலில் தஞ்சாவூருக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் அவர் தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இதையடுத்து மாலை 5 மணி அளவில் தஞ்சைப் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாட்டு மைய அரங்கு கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.

    அங்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாநாட்டு மைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    பின்னர் அங்கிருந்தபடியே ஆம்னி பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (ஸ்டெம் பூங்கா ), ராஜக்கோரி மயானத்தில் எரிவாயு தகன மையம், சூரிய மின் நிலையம், மேம்படுத்தப்பட்ட காந்திஜி வணிக வளாகம், கருணாசுவாமி குளம் பயன்படுத்தும் பணி, மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மாற்றுதல், புத்தகம் கலையரங்கம் சீரமைப்பு, நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம், மேம்படுத்தப்பட்ட பெத்தண்ணன் கலையரங்கம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியுடன் இருப்போர் தங்கும் அறை உள்பட ரூ.137 கோடியே 51 லட்சம் மதிப்பில் முடிவடைந்த 14 கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

    பின்னர் புதிதாக கட்டப்பட உள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மகாராஜா மஹாலில் நடைபெறும் பந்தல் சிவா இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

    முதலமைச்சரின் தஞ்சை வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் விதமாக மாநகர் முழுவதும் தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டுள்ளன. பலவிதமான வகைகளில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×