என் மலர்
நீங்கள் தேடியது "மோனிகா பெலூச்சி"
- இந்திய திரைப்படங்கள் பாடல்களால் தம்மை ஆக்கிக்கொண்டவை.
- இங்கு எப்படி சில்க் ஸ்மிதாவோ அதுபோல உலகளவில் மோனிகா பெலூச்சி.
காட்சிகளால் கட்டமைக்கப்படுபவையே படம். ஆனால் இதிலிருந்து சற்று வேறுபட்டது இந்திய திரைப்பாணி. இந்திய திரைப்படங்கள் பாடல்களால் தம்மை ஆக்கிக்கொண்டவை. அதிலும் தென்னிந்திய திரைப்படங்களில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதேபோல் பாடல்களுக்கு. இப்போது ஒருசில படங்கள் பாடல்கள் இல்லாமல் எடுக்கப்படுகின்றன. ஆனால் அப்படங்கள் ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றன. பாடல்கள் இல்லாமல் படமா? என்று. ஆனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரையுலகம் நூற்றாண்டு காலமாக இந்தப் பாணியைத்தான் பின்பற்றுகிறது.
இங்கு திரைப்படத்திற்கு உயிரோட்டத்தை கொடுப்பது பின்னணி இசையும், பாடல்களாகவுமே உள்ளது. திரைப்படம் சரியான முறையில் எடுக்கப்படாமல் இருந்தாலும் கூட அதன் இசைக்காக படம் சில நாட்கள் ஓடி லாபத்தை ஈட்டிய நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன. ஒரு வலியை, உணர்வை இல்லை ஒட்டுமொத்த கதையையும் காட்சியிலேயே கொடுக்க முடியும்.
ஆனால் அதை இசையாக கொடுத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் செய்தது தென்னிந்திய சினிமா. காட்சிக்கு ஏற்றவாறு அமையும் பாடல் வரிகளும், அவைகளுக்காக இசைக்கப்படும் இசையும்தான் படத்தை இன்னும் தனித்து காட்டும். அதனால்தான் இப்போதைய பாடல்களைவிட, 90ஸ், 80ஸ் காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தனித்து நிற்கின்றன. அவை பலருக்கு இப்போது துணையாக உள்ளன.

இளையராஜா, ஏ.ஆர். ரகுமான்
ஆனால் இந்த தோணி இப்போது முற்றிலுமாக மாறிவருகிறது. அதாவது ஒரு படம் வணிகரீதியாக வெற்றிப்பெற உணர்ச்சிகளை தாண்டி, கவர்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. கவர்ச்சி பாடல்கள் ஒரு விளம்பர நோக்கம் என அனைவரும் அறிவோம். ஆனால் எதற்கு தென்னிந்திய சினிமா இப்படி கீழ் இறங்கிறது என்று தெரியவில்லை? உச்ச நட்சத்திரங்களும் இந்த செயல்முறைக்கு துணை நிற்கின்றனர்.
இந்த வரிசையில் சமீபமாக வெளிவந்த முக்கியப் படம்தான் கூலி. கூலியின் வணிகரீதியாக வெற்றிக்காக வைக்கப்பட்ட ஒரு பாடல்தான் 'மோனிகா பெலூச்சி'. மோனிகா பெலூச்சி பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்க, 'நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ, கவர்மண்டுக்கு கேட்ருச்சி' எனும் வடிவேலு காமெடிபோல, கேட்கவேண்டிய மோனிகா பெலூச்சிக்கு கேட்டுச்சி. அவர்களே வியந்து இந்தப் பாடல் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இதில் கூலி படம் புகழ்பெற்றதோ இல்லையோ, மோனிகா பெலூச்சி இந்திய ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார்.
அதாவது கூலி பாடலுக்கு முன்புவரை மோனிகா பெலூச்சியை அறியாதவர்கள் பலர். அவர்கள் அனைவரும் யாருடா அது என கூகுளில் தேட இணையம் முழுவதும் நிறைந்தார் மோனிகா பெலூச்சி. ஜூலையிலிருந்து ஆகஸ்ட் வரை இவர்தான் வைரல். மோனிகா பெலூச்சி சுனாமி உண்டாச்சு என்பதுபோல இரண்டுமாதம் மோனிகா அலைதான்.

மோனிகா பெலூச்சி
யார் மோனிகா பெலூச்சி?
மோனிகா. இந்த பெயருக்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று ''தனித்துவம்''. பெயரைப் போலவே தனித்துவமான அழகி. அட்டகாசமான மாடல். இத்தாலி நடிகையான, இவர், ஹாலிவுட் மட்டுமல்லாமல், இங்கிலாந்து, பிரான்ஸ் மொழி படங்களிலும் நடித்தவர், The Raffle என்கிற இத்தாலி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் Bram Stoker"s Dracule மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இவர் புகழ் பாடினால் நீளும். சுருக்கமாக சொன்னால் இங்கு எப்படி சில்க் ஸ்மிதாவோ அதுபோல உலகளவில் மோனிகா பெலூச்சி.






