என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்செல் பேச்லெட்"

    • 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.
    • ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது.

    புதுடெல்லி:

    சிலியின் முன்னாள் அதிபரும், மனித உரிமைகளுக்கான உலகளாவிய வழக்கறிஞருமான மிச்செல் பச்லெட்டுக்கு அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான 2024-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார் என டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை அறிவித்திருந்தது.

    மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சிலி அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. சபையின் முதல் பெண் இயக்குநர், மனித உரிமைகளுக்கான ஐ.நா.சபையின் உயர் தூதர், சிலி நாட்டின் அதிபராக 2 முறை பணியாற்றியது போன்ற பணிகளுக்காகவும் அவர் இந்த விருதைப் பெறுகிறார்.

    ரூ.25 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது. 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்திரா காந்தி விருதை மிச்செல் பச்லெட்டுக்கு வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    வெரோனிகா மைக்கேல் பேச்லெட் ஜெரியா என்ற முழு பெயர் கொண்ட பேச்லெட் அமைதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பிற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், அவர் ஐ.நா.பெண்களின் நிறுவன இயக்குநராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், மற்றும் சிலியின் முதல் பெண் அதிபராக இரு முறை பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×