என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்மார்க் ஓபன்"

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்சயா சென் 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லி, மேத்யூ கிரிம்லி ஜோடியுடன் மோதியது.

    முதல் செட்டை 17-21 என சாத்விக் ஜோடி இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட சாத்விக் சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-11, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் லக்‌ஷயா சென் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நட் நியென் உடன் மோதினார்.

    முதல் செட்டை 10-21 என லக்ஷயா சென் இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-8, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தோல்வி அடைந்தார்.

    கோபன்ஹெகன்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் காங்சு உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 21-12 என வென்ற லக்ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-19, 21-14 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் குயென் உடன் மோதினார். இதில் மாளவிகா 13-21, 12-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்து வீராங்கனையிடம் 13-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

    கோபன்ஹெகன்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி, மலேசியாவின் பேர்லி டான் மற்றும் முரளிதரன் தினா ஜோடியுடம் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-19, 17-21, 15-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

    இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி, கனடாவின் கெவின் லீ மற்றும் எலியானா ஜாங் ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 22-20, 19-21, 22-24 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

    கோபன்ஹெகன்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, சீன வீராங்கனையான ஹான் யூ உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 18-21 என இழந்த பி.வி.சிந்து, அடுத்த இரு செட்களை 21-12, 21-16 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை சந்திக்கிறார்.

    ×