என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்"

    • இந்தியா... என்று கூற என்னது. இந்தியா Unitary State நாடா என்று கேட்டு அமைச்சர் அதிர்ச்சியடைந்தார்.
    • அமைச்சர் பொன்முடி தமிழகம் முழுவதும் சென்று இதேபோன்று கேள்வி கேட்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    சைதாப்பேட்டை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் நிறைவு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது, Unitary State என்றால் என்ன? என்று மாணவர்களை நோக்கி அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார். ஆனால் மாணவர்கள் யாரும் பதில் கூறவில்லை.

    இதையடுத்து Unitary State என்றால் என்ன என்று கூடவா அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர்கள் இன்னும் படிக்கவில்லை? என்று அமைச்சர் பொன்முடி வினவினார். மேலும், Unitary State ஆட்சி முறையில் உள்ள நாடு எது? என்று மாணவர்களை நோக்கி அடுத்த கேள்வி கேட்டார்.

    அப்போது மாணவர் ஒருவர், இந்தியா... என்று கூற என்னது. இந்தியா Unitary State நாடா என்று கேட்டு அமைச்சர் அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து, மேடையில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக துணைவேந்தர், அரசியல் அரசியல் பேராசிரியரை நோக்கி அமைச்சர் அதே கேள்வியை கேட்டார். இதற்கு அரசியல் அறிவியல் பேராசிரியர் 'புதுச்சேரி' என்று பதில் அளித்ததால் அமைச்சர் தனது பொறுமையை இழந்து, 'அட நீ ஏயா ஒருஆளு, நீ ஒரு அரசியல் அறிவியல் பேராசிரியர்'... என்ன பாடம் நடத்துகிறீர்கள்... வாத்தியார்களுக்கு முதலில் பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பிறகு தான் மாணவர்கள் படிப்பார்கள் என்று கூறி தனது கேள்விக்கு அவரே விளக்கம் அளித்தார்.

    Unitary State என்றால் ஒரே மத்திய அரசாங்கம்... அதன் கீழே மாநிலங்கள் இருக்காது... மத்திய அரசாங்கம் மட்டும் இருக்கும். அதற்கு உதாரணம் பிரிட்டன்.. அதே மாதிரி Federal State கூட்டாட்சி... இந்த கூட்டாட்சிக்கு உதாரணம் அமெரிக்கா... கூட்டாட்சி என்றால் பல மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒரு மத்திய அரசை உருவாக்கி அதன் கீழே மாநில அரசுகள் இருப்பதற்கு பெயர் தான் கூட்டாட்சி என்றார்.

    தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரம் இன்னும் பல மடங்கு உயர வேண்டும் என்றால், முனைவர் பட்டம் பெற்ற முன்னாள் பேராசியரான அமைச்சர் பொன்முடி தமிழகம் முழுவதும் சென்று இதேபோன்று கேள்வி கேட்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    ×