என் மலர்
நீங்கள் தேடியது "பனிப்பொழி"
- சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் சுவட்டர் மற்றும் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து சென்றனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் வனப்பகுதிகளும் பச்சை போர்வை போர்த்தியது போல் பசுமையாக கண்களுக்கு விருந்தளிக்கிறது. தற்போது பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு விடுமுறை இல்லாததால் சுற்றுலா பயணிகள் இன்றி ஏற்காடு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக நாள் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் தொடர்ந்து கடுமையான பனிமூட்டமும் நிலவி வருகிறது.

மலைப்பாதைகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் பகல் நேரங்களிலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றனர். குறிப்பாக நேற்று மாலை முதல் கடுமையாக குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இன்று காலையும் பனிமூட்டத்துடன் சாரல்மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சுவட்டர் மற்றும் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து சென்றனர். பனிமூட்டம், சாரல் மழை, கடுங்குளிர் நிலவி வருவதால் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டமின்றி ஏற்காடு நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.






