என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்"

    • குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
    • இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

    இந்நிலையில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை இன்று நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்திய விண்வெளி துறையில் இன்று முக்கியமான நாள். 33 கட்டுமானங்களுக்கான பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இதற்கான இடத்தை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என தெரிவித்தார்.

    • ரூ.20.29 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை வரும் 22-ந்தேதி 2.30 மணி முதல் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    இந்நிலையில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20.29 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

     தொழில்நுட்ப சேவை கட்டடம், எஸ்எஸ்எல்வி ஏவுதள மையம் உள்ளிட்டவைகளுக்கான கட்டுமான பணி ஒப்பந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை வரும் 22-ந்தேதி 2.30 மணி முதல் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    ×