என் மலர்
நீங்கள் தேடியது "ஷோபி டிவைன்"
- இங்கிலாந்துக்கு எதிராக 28 ரன்கள் மட்டுமே அடித்தார்.
- நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணி கேப்டன் ஷோபி டிவைன் அறிவித்திருந்தார்.
காலிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலையில், இன்று இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய கடைசி லீக் போட்டி, அவரின் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாகும்.
கடைசி போட்டியை வெற்றியுடன் முடிக்க ஷோபி டிவைன் விரும்பினார். ஆனால் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 168 ரன்னில் சுருண்டது. ஷோபி டிவைன் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அத்துடன் இங்கிலாந்து 29.2 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் கடைசி போட்டி ஷோபி டிவைனுக்கு வெற்றிகரமாக அமையவிலலை. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஏமாற்றம் அளிக்கிறது. எனது கிரிக்கெட் வாழ்க்கையை உயர்ந்த இன்னிங்ஸ் மற்றும் வெற்றியுடன் முடிக்க விரும்பினேன். இங்கிலாந்து அணிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
36 வயதான ஷோபி டிவைன் 2006 ஆண்டு ஆக்டோபர் 18ஆம்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டியிலும், 22ஆம் தேதி ஒருநாள் போட்டியிலும் அறிமுகம் ஆனார்.
159 ஒருநாள் போட்டிகளில் 9 சதம், 18 அரைசதங்களுடன் 4279 ரன்கள் அடித்துள்ளார். 146 டி20 போட்டிகளில் 1 சதம், 21 அரைசதங்களுடன் 3431 ரன்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளும், டி20-யில் 119 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
- ஷோபி டிவைன் 27 பந்தில் 32 ரன்கள் அடித்தார்.
- எலிஸ் பெர்ரி 37 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிக்காமல் இருந்தார்.
பெண்கள் பிரீமியர் லீக் 2024 சீசனின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 113 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மான அதிகபட்சமாக 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீராங்கன மெக் லேனிங் 23 பந்தில் 23 ரன்கள் அடித்தார். இந்த ஜோடி பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்தது. அதன்பின் 52 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணி சார்பில் சோபி மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஷ்ரேயாங்கா பாட்டில் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா- ஷோபி டிவைன் ஆகியோர் நிதானமாக விளையாடினர். குறைந்த இலக்கு என்பதால் ஆட்டத்தில் வேகம் காட்டவில்லை.
அணியின் ஸ்கோர் 8.1 ஓவரில் 49 ரன்களாக இருக்கும்போது டிவைன் 27 பந்தில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் எலிஸ் பெர்ரி களம் இறங்கினார். இவர் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் மந்தனா அதிரடி ஆட்டத்தை தொடங்க நினைக்கும்போது 39 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது ஆர்சிபி 15 ஓவரில் 82 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது, எலிஸ் பெர்ரி உடன் ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர்.
ஆர்சிபி வீராங்கனைகள் வாய்ப்பு கிடைக்கும்போது மட்டும் பந்தை பவுண்டரிக்கு விரட்டினர். ஆர்சிபி அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளிலும் தலா ஒரு ரன் கிடைத்தது. 3-வது பந்தை ரிச்சா கோஷ் பவுண்டரிக்கு விரட்ட ஆர்சிபி 19.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. எலிஸ் பெர்ரி 37 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிக்காமல் இருந்தார். ரிச்சா கோஷ் 14 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடந்த ஆண்டுதான் பெண்கள் பிரீமியர் லீக் தொடங்கியது. 2-வது சீசனான இதில் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.






