என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னிமலை கைத்தறி"

    • பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது.
    • கைத்தறி மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் போர்வை உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.

    கைத்தறி மூலம் பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது. கைத்தறி மூலம் காந்தி, கிரிக்கெட் வீரர் டோனி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னிமலையின் பாரம்பரியத்தின் அடையாளமான கைத்தறி போர்வையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் படமும் இணைந்து கைத்தறி நெசவாளர் அப்புசாமி என்பவரால் நெய்யப்பட்டது.

    இந்த போர்வையை சென்னிமலை ஒன்றிய தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் சார்பிலும், நெசவாளர்கள் அப்புசாமி இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து கைத்தறி போர்வையை பரிசாக வழங்கினர். 

    • நமது இந்திய தேசத்தில் பிரிண்ட் ரக துணிகள் அதிகம் உற்பத்தி ஆவது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் தான்.
    • எல்லோரும், எல்லா வயதினரும் விரும்பும் வகையில் டிசைன் வடிவமைக்கப்பட்டு பிரிண்ட் செய்கிறோம்.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் செயல்படும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு துணி ரகங்கள் நெசவு செய்யப்படுகிறது. பெட்ஷீட்கள், படுக்கை விரிப்புகள், திரை சீலைகள், தலையணை உறை, துண்டு ரகங்கள், வீட்டு உபயோக துணி வகைகள், மேட் ரகங்கள், துணி பைகள், மேட் ரக பைகள், சால்வை ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் என பல வடிவங்களில், பல வண்ணங்களில் மக்கள் விரும்பும் விதமாக நெசவு செய்யப்படுகிறது.

    இதில் குறிப்பாக சென்னிமலை பகுதி கைத்தறிகளில் கோரா நூலில் நெசவு செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பிரிண்ட் செய்யப்படும் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரை சீலைகள் 25 வருடங்களாக விற்பனை தொய்வில்லாமல் நடந்து வருகிறது.

    நமது இந்திய தேசத்தில் பிரிண்ட் ரக துணிகள் அதிகம் உற்பத்தி ஆவது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் தான். இங்கு பிரிண்ட் செய்யப்படும் துணி ரகங்கள் உலக புகழ் பெற்றவை.

    இதை சென்னிமலை படுக்கை விரிப்புகளில் புகுத்த 25 வருடங்களுக்கு முன்பு கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் முடிவு செய்து சென்னிமலையில் கைத்தறியில் உற்பத்தியாகும் கோரா நூல் துணி ரகங்களை அனுப்பி அங்கு பிரிண்ட் செய்யப்பட்டு படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள், திரை சீலை ரகங்கள் அறிமுகம் செய்தனர்.

    இந்த ஜெய்பூர் பிரிண்ட் ரக துணிகள் நல்ல விற்பனை ஆனது. அதை தொடர்ந்து 25 வருடங்களாக புது புது வண்ணங்கள், தற்போதுள்ள இளம் தலைமுறையினறும் விரும்பும் டிசைன்கள் பிரிண்ட் செய்யப்பட்டு விற்பனை நடக்கிறது.

    25 வருடங்களாக ஜெய்பூர் ரக பிரிண்ட படுக்கை விரிப்புகளை பிரிண்ட் செய்து கைத்தறி சங்கங்களுக்கு கொடுக்கும் ஜெய்பூரை சேர்ந்த ராஜேந்திரகுமார் பட் கூறும்போது:-

    எங்கள் ஜெய்பூர் பிரிண்ட் துணிகளில் மிக நேர்த்தியான பிரிண்ட் செய்கிறோம், இயற்கை சாயம் கொண்டு ஆர்க்கானிக் முறையில் பிரிண்ட் செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு சரும பிரச்சனைகளை உண்டாக்காது.

    மேலும், எல்லோரும், எல்லா வயதினரும் விரும்பும் வகையில் டிசைன் வடிவமைக்கப்பட்டு பிரிண்ட் செய்கிறோம். இந்த ரக பிரிண்ட் படுக்கை விரிப்புகள் வண்ணம் பளபளப்பாக இருக்கும். துணிகளை துவைப்பது எளிது. மேலும் எத்தனை சலவை செய்தாலும் சாயம் போகாது. மினுமினுப்பு தன்மை குறையாது.

    இதனால் கடந்த 25 வருடங்களாக இந்த படுக்கை விரிப்புகள் மவுசு குறையாமல் சென்னிமலை பகுதி கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் விற்பனை தொய்வில்லாமல் நடக்கிறது என்றார்.

    எந்த துணி ரகங்கள் ஆனாலும், 25 வருடங்களாக விற்பனையினை குறிப்பாக ஒரு தலைமுறை தாண்டியும் மவுசு குறையாமல் வைத்திருப்பது போற்ற தகுந்தது தான். அப்படிதான் சென்னிமலை கைத்தறி ஜெய்பூர் பிரிண்ட் ரக படுக்கை விரிப்புகளும் மவுசு குறையாமல் உள்ளது.

    தற்போது வரும் தீபாவளி விற்பனையினை கருத்தில் கொண்டு புதிய ரக ஜெய்பூர் பிரிண்ட் படுக்கை விரிப்புகளை உருவாக்க கைத்தறியாளர்கள் சோதனையினை தொடங்கி உள்ளனர்.

    ×