என் மலர்
நீங்கள் தேடியது "விசாரணை நீதிமன்றங்கள்"
- அபய் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோரை கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது
- உயர் நீதிமன்ற நீதிபதிகள் மனநிலையில் மாற்றம் வேண்டும் என்றார் தலைமை நீதிபதி
நீதிமன்றங்களுக்கு இடையேயான எந்தவொரு தகவல்தொடர்புகளிலும், கோப்புகளிலும், குறிப்பிலும் "டிரையல் கோர்ட்ஸ்" (Trial Courts) எனும் விசாரணை நீதிமன்றங்களை, "கீழ்/கீழமை நீதிமன்றங்கள்" (Lower Courts) என்று குறிப்பிடுவதை தவிர்க்குமாறு உச்ச நீதிமன்றம், தனது பதிவாளர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஒரு கொலை வழக்கில், குற்றவாளிகள் தாக்கல் செய்த குற்றவியல் மேல்முறையீட்டை விசாரிக்கும் போது, நீதிபதிகள் அபய் ஓகா (Abhay Oka) மற்றும் உஜ்ஜல் புயான் (Ujjal Bhuyan) ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
அந்த உத்தரவில் தெரிவித்ததாவது:
இந்த நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம், இனி, விசாரணை நீதிமன்றங்களை, "லோயர் கோர்ட்ஸ்" என குறிப்பிடுவதை நிறுத்தினால் பொருத்தமானதாக இருக்கும்.
"விசாரணை நீதிமன்ற பதிவுகள்" (Trial Court Record) என்பதயும் "கீழ்/கீழமை நீதிமன்ற பதிவுகள்" (Lower Court Record) என்று குறிப்பிடக்கூடாது.
நீதிமன்ற பதிவாளர் இந்த உத்தரவை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த உத்தரவின் நகல் அவருக்கு அனுப்பப்பட வேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2022 நவம்பர் மாதம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of India) சந்திரசூட், "துணை நீதிமன்றங்கள்" என அழைப்பது தவறு; அவை "மாவட்ட நீதிமன்றங்கள்" என அழைக்கப்பட வேண்டும் என்றும் இந்த நீதிமன்றங்கள் அனைத்தும் நீதி பரிபாலன அமைப்பில் ஒருங்கிணைந்த பங்கை கொண்டுள்ளவை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
"மாவட்ட நீதித்துறை" குறித்து குறிப்பிடும் போது, "கீழ்/கீழமை நீதித்துறை" என்று கூறும் போக்கை உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நிறுத்தி கொண்டு, இது குறித்து தங்கள் மனநிலையை அவர்கள் மாற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
- செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சென்னை உயர்நீதிமன்றம் விசரணை நடத்தியது.
- ஜாமின் நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாமல் 104 பேர் சிறையில் உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது.
ஜாமின் நிபந்தனைகள் எளிதில் நிறைவேற்றக் கூடியதாக விதிக்கப்பட வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜாமின் கிடைத்தும் பிணை செலுத்த முடியாமல் 800 கைதிகள் சிறையில் இருப்பதாக செய்தி வெளியானது.
செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சென்னை உயர்நீதிமன்றம் விசரணை நடத்தியது.
அப்போது, ஜாமின் நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாமல் 104 பேர் சிறையில் உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது.
மேலும், நீதிமன்ற உத்தரவின்படி இதுவரை 32 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்ட பணிகள் ஆணையம் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜாமின் நிபந்தனைகள் எளிதில் நிறைவேற்றக் கூடியதாக விதிக்கப்பட வேண்டும் என்றும், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்குவதில் எந்த பயனும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதைதொடர்ந்து, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.






